Friday, December 7, 2018

நீதிக்கட்சி

Surya Xavier
நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டாலும் அப்படியொரு கட்சி அதிகாரப் பூர்வமான பெயரோடு அன்று இல்லை.
1916 ல் டி.எம்.நாயர், நடேச முதலியார், தியாகராய செட்டியார் ஆகியோர் இணைந்து பார்ப்பனர் அல்லாதோர் கட்சியாக "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" என்ற கட்சியைத் தொடங்கினார்கள்.
அந்தக் கட்சியின் ஆங்கில ஏட்டிற்கு JUSTICE என்று பெயர். இந்தப் பெயரும் கூட லண்டனில் செயல்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியின் ஏடான JUSTICE என்பதிலிருந்தே உருவாக்கப்பட்டது.
அந்த பத்திரிக்கையின் பெயரை வைத்தே அதை ஜஸ்டிஸ் பார்ட்டி அல்லது நீதிக்கட்சி என்று அழைத்தார்கள். இந்த நீதிக்கட்சிக்கு பின்னாளில் தந்தை பெரியார் முழுமையாக தலைமை பொறுப்பேற்று செயல்படுத்தினார்.
இந்தப் பெயரை 1944 ல் சேலத்தில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.Image may contain: text
ஒரு பத்திரிக்கையின் பெயரை வைத்து அதுவே கட்சிப் பெயராக அறியப்பட்டது என்றால் அன்று எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று உணரலாம்.
இப்பவும் தான் பத்திரிக்கை நடத்துறாங்களே.
அம்பிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததென்று தலைப்புச் செய்தி போடுறான்.
அம்பிகாவுக்கு குழந்தை பிறந்தால் அது செய்தி அல்ல.
அம்பிகாவுக்கு ஆட்டுக்குட்டி பிறந்தால் தான் அது செய்தி.

0 comments:

Post a Comment