சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அதன் உரிமையாளர் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம்த்தில் உள்ளது தனியார் பெண்கள் விடுதி. இங்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அவ்வப்போது அவர்களது அறைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இது போல் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளால் பெண்கள் குழப்பமடைந்தனர். இதையடுத்து அறையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதை கண்டறிவதற்காக தங்கள் செல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற செயலியை டவுன்லோடு செய்துள்ளார்கள். அந்த செயலி மூலம் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியபோது அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆதம்பாக்கத்தில் புகார் அளித்தனர்.
Hidden Camera Detector apps - செயலியை பதிவிறக்கம் செய்ய
https://play.google.com/store/search?q=Hidden+Camera+Detector&c=apps&rating=1
செயலி செயல்படும் முறை
https://www.youtube.com/watch?v=ltLct5_vWNM
Wednesday, December 5, 2018
பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள்
December 05, 2018
TAMIL RANGOLI
0 comments:
Post a Comment