Monday, December 10, 2018

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி - சூர்யா சேவியர்

தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகிறது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் நம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி, தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று. ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பேசப்பட்ட மொழியாகும்.

Image may contain: 1 person, glasses


இது, உண்மையில் இந்தியா முழுமையும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும்.ஆரியர்கள்,நாகர்கள் மீதும்,அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியை விட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலந்தனர்.
தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்கள் தாய் மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால், தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பது புரியும்.


தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்புப் பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும்-நாகர்களும்,திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகிறது.
நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிக்கும் பெயராகும்.
எனவே தாசர்கள்-நாகர்கள்-திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூற வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டு தான். ஒன்று ஆரியர்கள்.
மற்றொன்று நாகர்கள்.
( பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7 பக்கம்:300)

0 comments:

Post a Comment