திரு.அன்பழகன் ஆறுமுகம் பதிவு
அனார்கலி.ஓவியம்;
அக்பரின் மகனான ஜஹாங்கீரின்(சலீம்)
காதலி.அமரத்துவமான காதலுக்கு உதாரணமாக சொல்லப்படும் இந்த கதைக்கு வரலாற்றில் எவ்வித ஆதாரமும்
இல்லை.அக்பரின் சம காலத்தில் அவரது
அவையில் இருந்த புகழ்பெற்ற அபுல் பாசலின் நூல்களிலும் இந்த காதல் குறித்து
எவ்வித பதிவும் இல்லை.மொடாக் குடிகாரரான ஜஹாங்கீரின்
ஹரம்மில்(அந்தப்புரத்தில்) ஏராளமான பெண்கள் குவிந்ததிருந்தாகவே வரலாற்று
ஆசிரியர்களும் ஜெஸ்யூட் பாதிரியார்களும் குறிப்பிடுகின்றனர்.ஒரு சிலர்
மட்டுமே லாகூரில் உள்ள உயர்ந்த தூண் போன்ற அமைப்பை அனார்கலி அக்பரால்
உயிரோடு வைத்து புதைக்கப்பட்ட சமாதி
என்று குறிப்பிடுகின்றனர்.வரலாற்ற
அவிழ்க்கப்படாமல் உள்ள மர்ம முடிச்சுகளில் ஒன்று அனார்கலி சலீம் காதல்.
Monday, December 3, 2018
அனார்கலி ஓவியம்
December 03, 2018
TAMIL RANGOLI
0 comments:
Post a Comment