Wednesday, January 16, 2019

இறைவனை தேடும் உலகத்தில் பாடல் வரிகள் - 60 வயது மாநிறம்

பாடல் வரிகள் : பழநிபாரதி, இசை : இளையராஜா பாடியவர் : இளையராஜா  
 
 
ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : பொன்னும் மணியும்
பூட்டி வைத்தவன்
இன்னும் கோடி தேட
கோடி கோடி குவித்து வைத்தவன்
கோட்டை கொடியை தேட

ஆண் : ஆசை தீர ஆடி பார்த்தவன்
அடுத்த உயரம் தேட
உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்
உச்ச புகழை தேட

ஆண் : தேடலே இந்த வாழ்க்கையின்
தேவையாய் ஆனதே
ஆயுளின் மொத்த காலமும்
தேடியே போனதே

ஆண் : அந்த இறைவன் இறைவன்
பூமிக்கு வந்தான்
இதயம் ஒன்றை தேடி
அது கிடைக்கவில்லை போடி

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : வாட்டம் இன்றி
காற்றை போலவே
வாழும் மனிதம் எங்கே
ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே
ஆழும் மனிதன் இங்கே

ஆண் : கொஞ்சம் மனிதம்
நெஞ்சில் வைத்து
தான் மிஞ்சும் மனிதன் எங்கே
நெஞ்சம் எங்கும்
வஞ்சம் சேர்த்து தான்
எஞ்சும் மனிதன் இங்கே

ஆண் : யாருமே இல்லை என்றுதான்
யாருமே இல்லையே
கருவிலே தோன்றும் உயிரெல்லாம்
கடவுளின் பிள்ளையே

ஆண் : அட மனிதா மனிதா
அலைச்சலை ஒளித்து
அமைதி ஒன்றை தேடு
அது கடவுள் வரைந்த கொடு

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
 
 

0 comments:

Post a Comment