Sunday, January 6, 2019

மூங்கில்வனம் 1 - சூர்யா சேவியர்

பூமிப்பந்து ஆதியில் வனங்களால் நிறைந்தது
வனங்களுக்குள் புகுந்த மனிதக்கூட்டம் அதை சீரமைத்து தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது.

வனங்கள் நிறைந்த பகுதிகளில் சமவெளியின் அடையாளத்தை ஆதி மனிதனுக்கு எது காட்டியிருக்கும்?
நதிகள் மட்டும் தான்.
நதிக்கரை வனங்கள் அகற்றப்பட்டு சமவெளிகள் உருவாக்கப்பட்டது.
நதியின் பெயரை வைத்து
சமவெளி நாகரீகங்கள் உருவானது.

இதன் தொன்ம அடையாளங்கள் இன்றும் தொக்கி நிற்கிறது.
புளியமரக் காட்டுப் பகுதியே
இன்றைய திண்டிவனம்.

தில்லை மரக்காடு தான்
தில்லை வனம்.

கடம்ப மரக்காடு தான்
கடம்ப வனமான
இன்றைய மதுரை.
மதுரை என்பதும் மருதமரத் துறை என்பதன் மருவிய ஒலிப்பு தான்.






Image may contain: outdoor






மூங்கில் மரக்காடு தான்
மூங்கில் வனம்.
அதைச் சைவம் வேணுவனமாக மாற்றி
திருநெல்வேலியாக மாற்றியது.
சிவன் வேணுநாதர் எனவும் அழைக்கப்படுவார்.
வனநாதரும் அவர் தான் என நிலைநிறுத்தப்பட்டது.

பக்தி இயக்க காலத்தில் இந்தப் பெயர் மாற்றங்கள் வெகுவாய் நடந்தேறின.

மூங்கில் அரிசி உண்டு வாழ்ந்த மக்களே மூங்கில் வன மக்கள்.
நெல் பயன்பாட்டிற்கு முந்தையது
மூங்கில் அரிசி பயன்பாடு.

நெல் பயன்பாடு உருவாகி பத்தாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
அப்படியெனில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையப் பாரம்பரியமே மூங்கில் வனப் பாரம்பரியம்.

இந்த ஆண்டு முழுமையும் மூங்கில் வனத்திற்குள் சுற்றி வரலாம்.
வாங்களேன் ஒரு எட்டு போயிட்டு வருவோம்.

0 comments:

Post a Comment