Wednesday, January 16, 2019

வாடிவாசல் - சூர்யா சேவியர்

வாடி என்றால் பொதுவான இடம் என்றே பொருள். மீன் குவியலாக வைத்திருக்கும் இடத்திற்கு மீன்வாடி என்றும், மர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு மரவாடி என்றும், விறகு வியாபாரம் நடக்கும் இடத்திற்கு விறகுவாடி என்றும் பெயர்.
லின் முகப்புப் பகுதியில் தென்கலை வைணவக் குறியீடு இருக்கும். வடகலை, தென்கலை என்பதெல்லாம் வடமொழி, தென் மொழி சார்ந்ததே. இராமானுஜரின் தென்கலை வைணவர்களே திருமலை நாயக்கர்கள். இவர்கள் காலத்தி தான் காளைகள் வாடிவாசல் என்று அமைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.
பெண்களை வாடி - போடி என்றும்,
வாமா -போமா என்றும்,
வாடா-போடா என்றும்,
"பா' என்றும் "செல்லம் - குட்டி' என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.
என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறார்கள்?

(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்) இதற்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
"மா' என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைப்பது.
"பா' என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைப்பது.
"டா' என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைப்பது.
அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைப்பது.
"குட்டி' என்று அழைப்பது குழந்தைக்கு நிகராகவும்,
"செல்லம்' என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும் அழைக்கிறார்கள்.
"டி' என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
" டி" என்பது எந்த உறவுமற்ற பொதுச் சொல்லே.
"டி' பயன்படுத்தத் தொடங்கும் காலம்
90 நாட்களுக்குப் பிறகே.
 Image result for வாடிவாசல்

கணவன் " டி" போட்டுப் பேசத் தொடங்கினால் மனைவி அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
கொளுத்திப் போடுவோம்.
அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு எடுத்த படம்.
ஆதிகாலத்தில் துளசி நிறைந்த காட்டுப்பகுதி இது.
அலங்கை என்றால் துளசி என்றே பொருள்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர்.வாடி என்பது சந்தை சார்ந்த சொல் என்பதால் வியாபாரிகளை இங்குள்ளவர்கள் மார்வாரிகள் என்றழைக்காமல் மார்வாடிகள் என்றார்கள்.
வணிகர்கள் கூடும் இடமாக ஆலமரம் இருந்தது.ஆலமரத்தடியின் அடியிலேயே பெரும் சந்தைகள் கூடும்.இந்த வணிகர்களே பனியா என்றழைக்கப்பட்டவர்கள். இதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆலமரத்தை தங்களின் ஆங்கில அகராதியில் இணைத்த சொல்லே பானியன் ட்ரீ என்பது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொல்லே பானியன்.

0 comments:

Post a Comment