Tuesday, January 15, 2019

பொங்கல் தமிழர்களின் பண்டிகையா? SURYA XAVIER

பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்பதற்கும்
தமிழர்கள் சாதி மதம் அற்றவர்கள் என்பதற்கும் இந்த ஒன்றும் உதாரணம்.
பொங்கல் அன்று விளக்கின் முன்பு தீபம் ஏற்றி உழைக்கும் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி,கிழங்கு வகைகளை வைப்பார்கள்.
இந்த கிழங்கு வகைகளில் சேனை,சேம்பு, கருணை,சிறுகிழங்கு,பனங்கிழங்கு கண்டிப்பாக இடம் பெறும்.
இந்த ஐந்து கிழங்குகளும் காலங்காலமாக பெருந்தெய்வக் கோவில்களுக்குள் எடுத்துச் செல்லமுடியாது.
ஏனெனில் உழைத்தவர்கள் உருவாக்கிய பொருட்கள் அவைகள்.அவை தீட்டான பொருட்களாம். புனிதம்,தீட்டு என்பதெல்லாம் ஆதிக்க வர்க்க மதிப்பீடுகளே.
விவசாயம் செய்வது இழிவான செயல் என்கிறான் மனு.
பிராமண,ஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும், உடல் முயற்சியும்,பிறர் தயவை நாடத்தக்கதாகவும் உள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. (மனுதர்மம் 10:83)
உழைப்பவர்கள் குறித்து மாமேதை ஏங்கெல்ஸ் கூறும் இக்கருத்து மனுவிற்கு சாட்டையடி.

Image may contain: flower and plant
"முழுமையாக உழைக்கும் மக்கள் கூட்டமானது,அவர் தம் இன்றியாமையாத உழைப்பில் முழுக்கவனமும் செலுத்தி வருவதால், அவர்களுக்கு உழைப்பின் தன்மை,சட்டப் பிரச்சனைகள்,அரசு விவகாரங்கள்,கலைஅறிவியல் போன்ற சமூகத்தின் பொதுவான விபரங்களை கவனிக்க நேரமில்லாமல் போகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு தனி வர்க்கம் தன்னை உழைப்பிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு மேற்கண்ட விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறது
அத்துடன் தனது சொந்த நலனுக்காக,
உழைக்கும் கூட்டத்தின் மீது மேலும் மேலும் உழைப்பின் சுமையைத் திணிக்கிறது".(osipov:1969,51)
கூடுதல் தகவல்.
காய்கறிகள் என்று நாம் சொல்கிறோம்.
காயோடு கறியை ஏன் சேர்த்துச் சொல்கிறோம்?
கிபி 15 ம் நூற்றாண்டில் சிலி நாட்டிலிருந்து மிளகாய் இங்கு வந்து சேர்ந்தது.
அதற்கு முன்பு உணவில் உரைப்பிற்காக கருப்பு மிளகு பயன்படுத்தப்பட்டது.
இந்த கருப்பு மிளகிற்கு கருங்கறி என்று பெயர்
காயும்-கருங்கறியும் இணைந்து இருந்ததால் காய்கறி என்று வழங்கப்படுகிறது.
பொங்கல் எந்த மதம் சார்ந்த பண்டிகையும் அல்ல.
உழைப்பவர்களின் பண்டிகை.

0 comments:

Post a Comment