Showing posts with label Tamil Song Lyrics. Show all posts
Showing posts with label Tamil Song Lyrics. Show all posts

Wednesday, January 16, 2019

இறைவனை தேடும் உலகத்தில் பாடல் வரிகள் - 60 வயது மாநிறம்

பாடல் வரிகள் : பழநிபாரதி, இசை : இளையராஜா பாடியவர் : இளையராஜா  
 
 
ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : பொன்னும் மணியும்
பூட்டி வைத்தவன்
இன்னும் கோடி தேட
கோடி கோடி குவித்து வைத்தவன்
கோட்டை கொடியை தேட

ஆண் : ஆசை தீர ஆடி பார்த்தவன்
அடுத்த உயரம் தேட
உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்
உச்ச புகழை தேட

ஆண் : தேடலே இந்த வாழ்க்கையின்
தேவையாய் ஆனதே
ஆயுளின் மொத்த காலமும்
தேடியே போனதே

ஆண் : அந்த இறைவன் இறைவன்
பூமிக்கு வந்தான்
இதயம் ஒன்றை தேடி
அது கிடைக்கவில்லை போடி

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : வாட்டம் இன்றி
காற்றை போலவே
வாழும் மனிதம் எங்கே
ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே
ஆழும் மனிதன் இங்கே

ஆண் : கொஞ்சம் மனிதம்
நெஞ்சில் வைத்து
தான் மிஞ்சும் மனிதன் எங்கே
நெஞ்சம் எங்கும்
வஞ்சம் சேர்த்து தான்
எஞ்சும் மனிதன் இங்கே

ஆண் : யாருமே இல்லை என்றுதான்
யாருமே இல்லையே
கருவிலே தோன்றும் உயிரெல்லாம்
கடவுளின் பிள்ளையே

ஆண் : அட மனிதா மனிதா
அலைச்சலை ஒளித்து
அமைதி ஒன்றை தேடு
அது கடவுள் வரைந்த கொடு

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனே தேடுகிறான்

ஆண் : இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில்
அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவனே தன்னையே தேடுகிறான்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

ஆண் : இறைவனை
தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
 
 

Wednesday, December 19, 2018

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை - மீரா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

வாவா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை ...
Movie Meera Music Ilaiyaraaja
Year 1992 Lyrics
Singers Asha Bhosle, S. P. Balasubramaniam